Posts

கண் கண்ணாடி மிக அவசியமா?

Image
கண் கண்ணாடி மிக அவசியமா ? உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சிகள் கண் பயிற்சிகள் கண்களுக்கு மிக மிக இன்றியமையாததாகும். ஆனால், அதே நேரத்தில் இவைகள் பார்வைத் திறனை மேம்படுத்தினாலும், பார்வைக் குறைபாடுகளை சரிசெய்யும் என நினைத்து  கண்ணாடி அணிவதை தவிர்ப்பது தவறாகும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.  கண் கண்ணாடியை தவிர்ப்பது எதனால்?  தனக்கு பார்வைத் திறன் குறைவு என்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், கண்ணாடி அணிவதால் வயதான தோற்றம் ஏற்படும், கண்ணாடி அணிவதால் முகத்தில் தழும்புகள் ஏற்படும்.... என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இவையாவும் அவரவர்களின் மனநிலையை பொருத்ததாகும். ஒரு சிலர், கண்ணாடி போட்டால் பழக்கமாகி விடும், கண்ணாடியின் திறன் , பருமன் ஏறிக்கொண்டே வரும் , கண்ணாடி இல்லாத தருணங்களில் சிரமப்பட வேண்டி வரும் என நினைக்கலாம். மேலும் சிலர், கண்ணாடி தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம்.  இது ஒரு சில காரணங்களுக்கு சரியானதுதான்,  மறதியாய் வைத்து விட்டேன், கண்ணாடி  வாங்க பணம் இல்லை கண் பரிசோதணை செய்ய நேரம்  இல்லை...

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

Image
கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது? கேரட், கீரைகள், பப்பாளி, விட்டமின் ஏ என்ற இந்த பதில் அனைவருக்கும் தெரிந்ததுதான். பொதுவாக நாம் எதை சாப்பிட்டாலும், நமது உடல் உட்கிரகித்து, உள் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுத்துவிடும். ஆனால், சில நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் சில செயல்பாடுகளில் குறை ஏற்படுகிறது. அதன்படி கண்களில் ஏற்படும் சில நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளை பற்றியும் அவை எந்த உணவுகளில் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.  கண் புரைக்கு பல காரணங்கள் என பார்த்தோம். அதில் ஒரு காரணம் ஆன்டாக்ஸிடன்ட் மற்றும் சில சில நுண்ணூட்டச் சத்துக் குறைபாடும் ஆகும். கண் பார்வை இழப்புக்கு காரணமான ' மேகுலர் டிஜெனரேஷன் ' பிரச்னைக்கும் இதுவே காரணம் . இவைகளுக்கு ' ஒமேகா ' எனப்படும் ' பேட்டி ஆசிட் ' தேவை . இது மீன் எண்ணெயில் (சாலமன் மீன் வகை) உள்ளது. சைவம்தான் வேண்டும் என்போர் பிளாக்ஸ் ஸீட் ' எனப்படும் ஆளிவிதை ஆயிலை பயன்படுத்தலாம். இவை தவிர லியூட்டின், ஸெக்ஸான்தின், விட்டமின் ஏ, பி , சி , இ இவைகளும் தே...

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை

Image
வியப்பூட்டும் லேசர் சிகிச்சை விழி ஒட்டு வில்லையின் (காண்டக்ட் லென்ஸ்) பயன்பாடு பற்றி பார்த்த நாம் ஒருபடி மேலே சென்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் விளைந்த பார்வைத்திறன் மேம்பாட்டு அறுவை மற்றும் லேசர் ஒளிக்கற்றை சிகிச்சை பற்றி காண்போம்.  கண்ணாடி அணிய பிடிக்கவில்லை, விழி ஒட்டுவில்லை அணிய பயம், பராமரிப்பு செய்வதில் சிரமம் இப்படி பல்வேறு காரணங்களால் மாற்று வழி தேடியவர்களுக்கு பார்வைத்திறன் மேம்பாட்டு சிகிச்சையின் வகைகளும், பலன்களும் வெளிச்சத்திற்கான விடியல் என்று கூறினால் மிகையாகாது.  1949 ல் ஆரம்பித்த ஆராய்ச்சி 1980ல் பரிசோதனை முறையில் வெற்றி பெற்று , 1987ல் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு 1990ல் அங்கீகரிக்கப்பட்டு 2003 ல் மாபெரும் வளர்ச்சி பெற்று இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பல லட்சம் மக்கள் தங்கள் கண் பார்வை குறைபாடுகளை சரிசெய்து கொள்ள பார்வைத்திறன் மேம்பாட்டு (லேசர்) சிகிச்சையினை ஏற்றுக்கொண்டு பலன் அடைந்து வருகின்றனர்.  லேசிக் எனும் சிகிச்சை முறை விழி வெண்படலத்தில் லேசர் செலுத்தி அதன் இயல்பு ஆரத்தில் மாற்றம் செய்து பார்வைத...

கான்டெக்ட் லென்ஸ் பயன்கள்!!

Image
கான்டெக்ட் லென்ஸ்  பயன்கள் விரிவான பார்வை! கண்ணாடியின் மாற்றாக விழி ஒட்டுவில்லை (கான்டெக்ட் லென்ஸ்) பற்றிய பயன்களை காண்போம் ..  கண்ணாடி அணிய பிடிக்கவில்லை... வயதான தோற்றத்தை தருகிறது .. முகத்தில் தழும்பு ஏற்படுகிறது.. எனது அழகு குறைகிறது.. கண்ணாடி அணிந்தும் பார்வைக்குறை உள்ளது.. கண்ணாடிக்கு மாற்று உண்டா என ஏங்குபவர் பலருண்டு. உண்டு! ஆம்! அது விழி ஒட்டுவில்லை எனும் கான்டெக்ட் லென்ஸ். ஆரம்ப கால கட்டத்தில் விழி ஒட்டுவில்லை ஆராய்ச்சி பல சவால்களை கொண்டதாகவும், மக்களிடையே கொண்டு செல்வதில் மற்றும் பயன்படுத்துவதில் பல நிறைகுறைகளை கொண்டதாகவும் இருந்தது.  காலத்தின் மாற்றம், விஞ்ஞானத்தின் ஏற்றம், மக்களின் எதிர்பார்ப்பு, விழி ஒட்டு வில்லை உற்பத்தியாளர்களின் உலகளாவிய போட்டி, ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் விழி ஒட்டுவில்லை வகைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.  தடிமனான, மிகப்பெரிய அமைப்புடன் போடுவதற்கும், போடப் பயிற்சி கொடுப்பதற்கும் சிக்கலான ஸ்கிளிரல் விழி ஒட்டுவில்லை வகைதான் ஆரம்பத்தில் இருந்தது. மருத்துவர்களே இவ்வகைகளை பரிந்துரை செய்வதில் தயக்கம் காட்டினர். ஆனாலும் சிலவகைள ப புணர...

கண் கணினி

Image
கண் கணினி! அறிவு என்பது பல வகையாகும். அதில் காட்சி புலனறிவு, கற்பனை அறிவு, வடிவமைப்பு அறிவு என்பதெல்லாம் கணினித் தொழிலுக்கு பயன்படும் வகைகள். ஐம்புலன் அறிவில் கண் பார்வை புலனறிவே கணினித் தொழிலுக்கு பிரதானம். கணினி இல்லாமல் இன்றைய உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் அனைத்து தொழில்முனைவோர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், தகவல் பரிமாற்றத் தேவைகள், பண பரிவர்த்தனைகள் என அத்தனை தேவைகளுக்கும் கணினி பயன்பாடு மிகமிக அவசியமான ஒன்று. அதே நேரத்தில் கணினி பயன்படுத்தும்போது நமது கண்களில் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அதிலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி என காண்போம்...  தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நல இயக்ககம், கணினி தொழில் செய்பவர்கள், கணினி பயன்பாடு உள்ளவர்கள் கண்களை முறையாக கண் மருத்துவர்கள் மற்றும் கண் பார்வை பரிசோதனை நிபுணர்களிடம் பரிசோதித்து அவர்கள் ஆலோசனைப்படி கண்களை கணினியால் வரும் சில பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.  கணினி பயன்படுத்துவோர், கணினி தொழில்முறையில் பயன்படுத்துவோர், ...

வெள்ளெழுத்து ஏன்?

Image
வெள்ளெழுத்து   ஏன் ? கண்களின் விழி ஊடக வில்லையை மீட்சிவிசை கொண்ட தசைநார் போன்ற ஓர் அமைப்பு சிலியரிபாடி என்ற அமைப்புடன் இணைத்து உள்ளது . நாம் பார்க்கும் தூரத்திற்கு தகுந்தாற்போல் நமது கண்ணின் தகவமைப்புத்திறன் இந்த மீட்சிவிசை தசைநார் மூலம் , கண்ணின் விழி ஊடக வில்லையின் குவியத்தூரத்தை மாற்றி எந்த தூரத்தில் உள்ளவற்றையும் பார்க்கும் , குவியத்திறன் மாற்றம் தானியங்கி குவியத்தன்மையை பெறுகிறது .  ஆனால், தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 36 வயதிற்கு பிறகும் , சராசரி நல்லப் பார்வைத்திறன் கொண்டவர்களுக்கு 40 வயதிலும் இந்த குவியத்திறன் மாற்றத் தன்மையின் குறைபாடு காரணமாக   மிக அருகில் உள்ளவைகளை சரிவர படிக்க இயலாத தன்மை ஏற்படுகிறது . இதை வெள்ளெழுத்து ( அ ) சாளேஸ்வரம் எனக் கூறுவர் .   இவர்களின் குவியத்திறன் மாற்ற திறன் தன்மையை ஆராய்ந்து தகுந்த குவி ஊடக வில்லை கொண்ட கண் கண்ணாடியை பரிந்துரை செய்வதன் மூலம் அவர்களின் பார்வைத் திறனை   அதிகரித்து பயன் பெறச் செய்யலாம் ....